கார்த்தியின் கூண்டுக்கிளி, செல்வாவின் ஜோதிடக்கிளியுடன் பேசுகிறது
கொஞ்சம்
புண்ணியம்
செய்தவன்
தான்!
ஆனால்
அதோ அங்கே
நண்பா நீ,
அந்தோ....
தெரு ஓரத்தில்
ஜோதிடனின்
கூண்டிலிருந்து
வெளிவந்து
அர்த்தமற்ற
அட்டையை
பொறுக்கித்
தந்துவிட்டு
அவன் காட்டும்
கொட்டையை
கடனே எனக்
கவ்வி
சட்டென
மீண்டும்
அரை அடி
அல்ப்பச்
சிறைக்குள் ,
பறப்பதை
மறந்து
பிறப்பை
நொந்து
வாழ.....
....
அட, கேடுகெட்ட
மானிடா,
அவன்
பொறுக்கிய
அட்டையில்
உனக்கு
அதிர்ஷ்டம்
கொட்டோ
கொட்டு
என்றா
கொட்டும் ?
அவனால்
அவனுக்கே
விமோசனம்
இல்லையே
உனக்கு
மட்டும் என்ன
பண மழை
பொழியவா
போகுது
நண்பனுக்கு
சிறகில்லை
நானோ சிறகு
இருந்தும்
பறப்பதில்லை
என்று தணியும்
எங்கள்
சுதந்திர தாகம்,
பாரதிக்கே
தீரவில்லை
நாங்கள்
எம்மாத்திரம்!
No comments:
Post a Comment