கூண்டுக்கிளி
என் சிறகுகள் வெட்டாமலே
சிதைக்க படுகின்றன
உன் விழி என்மேல் படுமென
காத்துகிடக்கும் வேளைகளில்
எனது கூண்டின் அகலம்
சிறுத்து கொண்டே வருகின்றன
என் உலகம் வேறென தெரிந்தும்
தெரியாமல்
உன் உலகம் என்னுடையது
என நீ புகுத்துகிறாய் என்னுள்ளே
நான் செல்லவேண்டிய இடம்
எனக்கு தெரியும்
நான் சொல்வது
உனக்கு
புரிகிறதா
உன்னுடைய சந்தோசங்களில்
நான் பங்கெடுப்பதாய்
நீயே கூறி கொள்கிறாய்
நானும் நீ பேசுவதை பேசுவதாய்
உணர்கிறாய்
என் உலகம் வேறு என்பதை
நான் காண
நீ இட்ட கூண்டின் வெளியே
இருக்கும் ஒரு பறவையின் ஒலி
உணர்த்தும் கணங்களில் என் மனம் படும்பாடு
நீ என்று உணர்வாய் என
ஏங்கும் தருணங்களில்
என் நாட்கள் கடந்து விடுமென
அஞ்சுகிறேன்
இன்னொரு தலைமுறையும்
உனக்கு அடிமையாகி விடுமோ என்று
No comments:
Post a Comment