Tuesday, June 10, 2025

 கூண்டுக்கிளி 


என் சிறகுகள் வெட்டாமலே 
சிதைக்க படுகின்றன 
உன் விழி என்மேல் படுமென 
காத்துகிடக்கும் வேளைகளில் 
எனது கூண்டின் அகலம் 
சிறுத்து கொண்டே வருகின்றன 
என் உலகம் வேறென தெரிந்தும் 
தெரியாமல் 
உன் உலகம் என்னுடையது 
என நீ புகுத்துகிறாய் என்னுள்ளே 

நான் செல்லவேண்டிய இடம் 
எனக்கு தெரியும் 
நான் சொல்வது 
உனக்கு 
புரிகிறதா 

உன்னுடைய சந்தோசங்களில் 
நான் பங்கெடுப்பதாய் 
நீயே கூறி கொள்கிறாய் 
நானும் நீ பேசுவதை பேசுவதாய் 
உணர்கிறாய் 
என் உலகம் வேறு என்பதை 
நான் காண 
நீ இட்ட கூண்டின் வெளியே 
இருக்கும் ஒரு பறவையின் ஒலி 
உணர்த்தும் கணங்களில் என் மனம் படும்பாடு 
நீ என்று உணர்வாய் என 
ஏங்கும் தருணங்களில் 
என் நாட்கள் கடந்து விடுமென 
அஞ்சுகிறேன் 
இன்னொரு தலைமுறையும் 
உனக்கு அடிமையாகி விடுமோ என்று



No comments:

Post a Comment

கூண்டுக்கிளி

கார்த்தியின் கூண்டுக்கிளி, செல்வாவின் ஜோதிடக்கிளியுடன் பேசுகிறது நான்  கொஞ்சம் புண்ணியம் செய்தவன் தான்!  ஆனால் அதோ அங்கே  நண்பா நீ, அந்தோ......