Sunday, September 15, 2024

புலி வேட்டை





வில் கொண்டு நம் கண்கள் எனும் வில் கொண்டு நடத்திய புலி வேட்டை கபினி பயணம்.


உங்களது ஆர்வம் எத்தனை வேகமாக கபினி பயணம் என்ற உடன் செயல்பட்டது என்பது எனக்கு மட்டுமே தெரியும்.


கபினி பயணம் நாம் செய்தது மிகவும் முக்கியமான பயணங்களில் ஒன்று.

நம் மனதில் இருந்த இரண்டு எதிர்பார்ப்புகள்.ஒன்று பண்டிப்பூரில் விட்ட புலியை இங்கு காணவேண்டும்.அத்துடன் ப்ளாக் பேன்த்தர் காணல்.

நீங்கள் குறிப்பிட்டதை போல முதல் நாள் படகுப் பயணம் நாம் மட்டுமே போட்டோகிராபர்கள்.

எல்லோரும் நம்முடன் சேர்ந்து பறவைகள் பற்றி தெரிந்து கொண்டார்கள்.

இரண்டாம் நாள் பயணம் நாம் காட்டில் நுழைவு பாதையில் காத்திருக்கும் தருணம் புள்ளி மான்  ,குரங்குகளின் சப்தம் புலி அல்லது சிறுத்தையின் வருகை அறிகுறியை உணர்த்தியது.வேகமாக ரோட்டினை கடந்து சென்ற சிறுத்தையை பலரும் கவனிக்க முடியவில்லை.

அரைமணி நேரம் தொடர்ந்து காட்டில் தேடியதில் ஒரு அமைதியான பாதையில் நம்மை அமர்ந்து வரவேற்று நம்மில் பலருக்கு தெரியாத புலியின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் அத்தனை நடவடிக்கைகளும் தெரியப்படுத்திய பெல்லா பெண் புலிக்கு நன்றி.இத்தனை அருகில் கம்பீரமான ஒரு புலியின் நடவடிக்கைகளை படம் பிடிக்கும் வாய்ப்பு.அரைமணி நேரம் நம் வாழ்வில் புலியுடன் இருந்தது வாழ்கையின் ஒரு முக்கிய பகுதியாக கருதுகிறேன்.

எத்தனை படங்கள்.அந்த இடத்திற்கு அரைமணி நேரம் கழித்து வந்த அத்தனை பேரும் எந்த இடத்தில் இருந்து புலி வந்ததது எங்கு சென்றது என கேட்கையில் நமக்கு எப்படி சொல்வது என தெரியவில்லை என்றே சொல்லவேண்டும்.ஏனெனில் அந்த திகைப்பில் இருந்து நாம் விடுபட ஒரு வாரம் ஆயிற்று.


No comments:

Post a Comment

கூண்டுக்கிளி

கார்த்தியின் கூண்டுக்கிளி, செல்வாவின் ஜோதிடக்கிளியுடன் பேசுகிறது நான்  கொஞ்சம் புண்ணியம் செய்தவன் தான்!  ஆனால் அதோ அங்கே  நண்பா நீ, அந்தோ......