Monday, September 9, 2024

உன் விழிகள் தேடிய இரைகள்


பயணங்கள் எங்களின் இலக்காக மாறி சில வருடங்கள் ஆகின .

சில மாதங்களுக்கு முன் செல்வா அவர்கள் இந்த வருடம் எங்கெல்லாம் செல்லலாம் என கேட்டபோது வேகமாக சில  இடங்களை தேர்ந்தெடுத்து அனுப்பினேன் .


வேடந்தாங்கல் 

ரங்கனந்திட்டு 

ஜிம்க்கார்பேட் 

பந்திப்பூர் 

நகெர்ஹோலே 

கபினி 

சத்தால் 

முதுமலை 

வயநாடு 

குர்க் 

தலக்காடு 

தாண்டெலி 

ஆகும்பே 


இதில் இன்னும் செல்வா அவர்கள் தொடர்ந்து சேர்த்துக்கொண்டு இருக்கிறார் .


இதில் பறவைகளுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம் .நாங்கள் எங்கு சென்றாலும் தேடுவது பறவைகளைத்தான் முதலில் .


பந்திப்பூர் : இங்கு எல்லோரும் செல்வது புலிகளையும் சிறுத்தைகளையும் பார்ப்பதற்காக .நாங்களும் அதற்காகத்தான் சென்றோம்.ஆனால் எங்கள் கண்கள் தேடியது பறவைகளைத்தான்.அப்படி தேடிப்பார்த்ததுதான் crested serpentine eagle .

நாங்கள் புலியைத்தேடி ஜீப்பில் சென்றுகொண்டு இருந்தோம் .என் எதிரில் பார்த்தவுடன் நான் fishowl என்றே நினைத்தேன் .சார் owl என்றேன். 

செல்வா சாரின் அனுபவம் விடை கொடுத்தது ..இது crested serpentine eagle ..எங்களது ஓட்டுனரும் அதை உறுதி செய்தார் .பந்திப்பூரில் JLR ஜீப் ஓட்டுனர்கள் எல்லாருமே ஒரு பறவையாளர்கள் ,விலங்கியியலாளர்கள் .


அது ஒரு brown கலரில் பார்ப்பதற்கு சற்று black kite போல இருந்தாலும் ,கொஞ்சம் அழகாக தலையில் கொண்டையுடன் காணப்பட்டது .


பெயரிலே பொருள் இருந்தது அது பாம்பை உண்ணக்கூடிய பறவை என்று .அது பிற பறவைகளையும் ,தவளைகளையும் ,ஓணான்கள் எலிகள் அனைத்தையும் உண்ணும் .


இது எப்பொழுதும் மரத்தின் மீது காத்திருந்து தனக்கான  உணவு வரும்போது பிடித்து உண்ணக்கூடியது .


இது பொதுவாக மிக உயர்ந்த மலைப்பகுதியில் காணப்படும் .சில குறிப்புகளில் உலகத்தில் மொத்தம் 21 வகையான crested serpentine eagle இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்கள் .

நூற்றுக்கும் மேற்ப்பட்ட kingfisher இருப்பதாக கேள்விப்பட்டதில் இருந்து அத்தனையும் பார்த்தாகவேண்டும் ,photo எடுத்தாகவேண்டும் என்னும் ஏக்கம் இப்பொழுது crested serpentine eagle வகை பற்றி தெரிந்ததும் எங்கு சென்று தேடுவது .


எண்ணங்களை வீசு வலையாக பறவைகளின்  விழிகளில் சிக்கும் உன் ஏக்கங்கள்

No comments:

Post a Comment

கூண்டுக்கிளி

கார்த்தியின் கூண்டுக்கிளி, செல்வாவின் ஜோதிடக்கிளியுடன் பேசுகிறது நான்  கொஞ்சம் புண்ணியம் செய்தவன் தான்!  ஆனால் அதோ அங்கே  நண்பா நீ, அந்தோ......