Tuesday, June 10, 2025

கூண்டுக்கிளி

கார்த்தியின் கூண்டுக்கிளி, செல்வாவின் ஜோதிடக்கிளியுடன் பேசுகிறது



நான் 
கொஞ்சம்
புண்ணியம்
செய்தவன்
தான்! 
ஆனால்
அதோ அங்கே 
நண்பா நீ,
அந்தோ....
தெரு ஓரத்தில்
ஜோதிடனின்
கூண்டிலிருந்து
வெளிவந்து
அர்த்தமற்ற
அட்டையை
பொறுக்கித் 
தந்துவிட்டு
அவன் காட்டும்
கொட்டையை
கடனே எனக்
கவ்வி
சட்டென 
மீண்டும்
அரை அடி 
அல்ப்பச் 
சிறைக்குள் ,
பறப்பதை
மறந்து
பிறப்பை
நொந்து 
வாழ.....

....
அட, கேடுகெட்ட
மானிடா, 
அவன் 
பொறுக்கிய
அட்டையில்
உனக்கு
அதிர்ஷ்டம்
கொட்டோ
கொட்டு
என்றா 
கொட்டும் ?
அவனால் 
அவனுக்கே
விமோசனம்
இல்லையே
உனக்கு
மட்டும் என்ன
பண மழை
பொழியவா
போகுது
நண்பனுக்கு
சிறகில்லை
நானோ சிறகு 
இருந்தும் 
பறப்பதில்லை
என்று தணியும்
எங்கள் 
சுதந்திர தாகம், 
பாரதிக்கே 
தீரவில்லை
நாங்கள்
எம்மாத்திரம்!

 கூண்டுக்கிளி 


என் சிறகுகள் வெட்டாமலே 
சிதைக்க படுகின்றன 
உன் விழி என்மேல் படுமென 
காத்துகிடக்கும் வேளைகளில் 
எனது கூண்டின் அகலம் 
சிறுத்து கொண்டே வருகின்றன 
என் உலகம் வேறென தெரிந்தும் 
தெரியாமல் 
உன் உலகம் என்னுடையது 
என நீ புகுத்துகிறாய் என்னுள்ளே 

நான் செல்லவேண்டிய இடம் 
எனக்கு தெரியும் 
நான் சொல்வது 
உனக்கு 
புரிகிறதா 

உன்னுடைய சந்தோசங்களில் 
நான் பங்கெடுப்பதாய் 
நீயே கூறி கொள்கிறாய் 
நானும் நீ பேசுவதை பேசுவதாய் 
உணர்கிறாய் 
என் உலகம் வேறு என்பதை 
நான் காண 
நீ இட்ட கூண்டின் வெளியே 
இருக்கும் ஒரு பறவையின் ஒலி 
உணர்த்தும் கணங்களில் என் மனம் படும்பாடு 
நீ என்று உணர்வாய் என 
ஏங்கும் தருணங்களில் 
என் நாட்கள் கடந்து விடுமென 
அஞ்சுகிறேன் 
இன்னொரு தலைமுறையும் 
உனக்கு அடிமையாகி விடுமோ என்று



கூண்டுக்கிளி

கார்த்தியின் கூண்டுக்கிளி, செல்வாவின் ஜோதிடக்கிளியுடன் பேசுகிறது நான்  கொஞ்சம் புண்ணியம் செய்தவன் தான்!  ஆனால் அதோ அங்கே  நண்பா நீ, அந்தோ......