Saturday, March 23, 2024

எண்ணப்பறவை சிறகடித்து..!-5


தம்பி கார்த்தி,

ரெங்கனத்திட்டு பற்வை சரணாலயம். பல முறை இங்கே போயிருக்கிறேன். ஆனா, இந்த முறை உன்னோடு போனது ஒரு புது அனுபவம். பெங்களூருவிலிருந்து 3 மணிக்கு கிளம்ப சற்று யோசனையாத்தான் இருந்தது. ஆனா கெளம்பிட்டோம்.  கொஞ்சம்கூட அசதியில்லை. எவ்வளவு varieties பாக்கப்போறோம்ங்கிற excitement தான் காரணம். இன்னும் 19 வயசுன்னு நெனப்பு அப்படின்னு மனைவி சொல்றது அடிக்கடி கேக்கும். பறவை பாக்கப்போகும் போது, 19 ஆவது, 69 ஆவது, அதுவும், கார்த்தி பக்கத்தில இருக்கும் போது. ஒரு ட்ரிப்பில்,  இன்னொரு இளைஞர், என்னோடு இருந்தார். சற்று தலை வலி, சற்றே ஓய்வு எடுக்க நினைத்தேன். ஆனா, அந்த இளைஞரோ, கொஞ்சம் கூட யோசிக்காம , சுவாரசியமா Tawny Eagle பத்தி பேசிகிட்டே இருந்தார்.  அதுக்கப்புறம்,  Tawny Eagle பாக்கற ஆசையே போயிடுச்சு. ஆனா, நான் உனது அன்பையும், உதவும் இயல்பையும் பாத்திருக்கிறேன். 

நீ காரை நிதானமாக ஓட்டியது மட்டுமல்ல, 6 மணிக்கு சரணாலயத்தை அடைந்தும் விட்டோம். பறவை காணலில், மிக முக்கியம், அதிகாலையில், இலக்கை அடைவது தான். இனி வரும் காலத்தில், முதல் நாளே, மைசூரிலோ அல்லது, ரெங்கனதிட்டுவிலோ தங்கி விடவேண்டும். மைசூரிலிருந்து 15 கிலோமீட்டர் தான். 

நீ குறிப்பிட்ட Tickell's flycatcher, முதன்முதலாகப்பார்த்தது, ஈரோட்டை அடுத்த வெள்ளோடு பறவை சரணாலயைத்தில் தான். அப்ப அது சரணாலயமா, அறிவிக்கப்படல. நானும், என் நண்பர் பரமசிவன், மற்றும் நண்பர்களோட வெள்ளோடு ஏரி பத்தி கேள்விப்பட்டு போறோம். Tickell's  தான், எங்கள் கண்ணில் முதலில் பட்டது. என்ன அழகு. ஆரஞ்சும்  நீலமும் பளிச்சுன்னு இருந்துது. ஆஹா, அருமை என்று தோன்றியது. அது தான், எனக்கு அங்கே பற்வை அட்டவணை (Bird Checklist) எடுக்கணும்னு ஆர்வத்த உண்டாக்கியது என்று நினைக்கிறேன். வெகு விரைவிலேயே, நாங்கள் DFO வை அணுகி, வெள்ளோட்டை சரணாலயனமாக்கக் கோரிக்கை வைத்தோம். நான் மாற்றலாகி பணி நிமித்தம், டெல்லி போயிட்டேன். நண்பர் பரமசிவன் தாஅன், விடா முயற்சியுடன் அந்த சரணாலயம் அமைய முக்கிய காரிய கர்த்தா. எனது பங்கு, நான் தலைமை தாங்கி பறவை கணக்கெடுப்பு செய்ததும் வனவிபாகத்துக்கு என் கைப்பட கடிதம் எழுதியது மட்டுமே. நண்பர் பரமசிவன் என் வாழ்க்கையில் நான் கண்ட ஒரு மாமனிதர். ஆக, அது ஒரு சகாப்தம்

ரெங்கணதிட்டு பரவிகளின் சொர்க்கபூமி. நீர், நிலம், வயல், பசுஞ்சோலை என நான்கு இடங்களும் ஒன்றாக இணைந்த  இயற்கை விந்தை. அதானால் தான், நாம் வயலில்  Rednaped Ibis ஐயும்  பாறைகளில் Thick knee, நீரில் Spot billed pelican, மரங்களில் Paradise flycatcher, வானத்தில் Crested Serphant Eagle என வித விதமான பறவைகளைப் பார்த்தோம். இது ஒரு நல்ல வாய்ப்பு. ரெங்கணதிட்டுவில், 236 வகை பறவைகள் இதுவரை பதிவாகி உள்ளன.  67 பறவைகளை பதிவிட்டதால், உனது பெயர் E Bird India பதிவுகளில், நாங்காவது இடத்தில் இருக்கிறது. எனது வாழ்த்துகள். 

படகு ஓட்டும் நாகராஜ் பற்றிக் குறிப்பிட வேண்டும். எப்படி இத்தனை பறவைகளின் ஆங்கிலப்பெயர் தெரியும் என்று கேட்டேன். 10 வருடமாகப் பார்த்த அனுபவம் தான் என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் பலமுறை பரத்புர் பறவை சரணாலயம் சென்றிருக்கிறேன். அற்புதமான இடம், ராஜஸ்தானில் இருக்கிறது. அங்கே 200க்கும் மேற்பட்ட சைக்கிள் ரிக்சா தொழிலாளிகள் இருக்கிறார்கள். சுற்றுலாப்பயணிகளை 12 கிமீ அழைத்துச் செல்வதும் பறவைகளை அடையாளம் காட்டுவதும் தான் அவர்களுக்குத்தொழில். அதுவும் வலசை வரும் பறவைகள் ஆறு மாதம் தான் இருக்கும். மற்ற நாட்களில், கூலிவேலை தான். ஆனால், 200 பறவைகளின் ஆங்கிலம், இந்தி, ஜெர்மன், ஃப்ரஞ்ச் பாஷைகளீல், வெளுத்துக்கட்டுவார்கள். ஆண்டுக்கு ஒரு தடவை BNHS என்ற தன்னார்வ அமைப்பு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றன. ஆனால் நம்ம ஊர் நாகராஜுக்கு இந்த வாய்ப்பு கிடையாது. இதைத்தான் அனுபவ அறிவு எங்கிறோம். 

காவரியாற்றின், ஒரு வளைவு தான் இந்த ரெங்கணதிட்டு. அங்கங்கே  மனிதன் அனுகமுடியாத திட்டுக்கள் இருக்கின்றன. திட்டுக்களில், மண்ணரிப்பு ஏற்படாமல் இருக்க, மணல் மூட்டைகளை அடுக்கி வேலியிட்டு, பாது காக்கிறது வனத்துறை. எக்கச்சக்கமான முதலைகள் படகின் வெகு அருகில் இருந்தன. இருந்தாலும் இதுவரை ஒரு அசம்பாவிதமும் நேர்ந்ததில்லை என நாகராஜ் கூறினார். 

இன்னொரு குறிப்பிட வேண்டிய விஷயம், பறக்கும் நரிகள். அதென்ன தெரியுமா? பெரிய size  வௌவாலைத்தான் குறிப்பிடுகிறோம். 14 ஆண்டுகளுக்கு முன் போன போது பார்த்திருக்கிறேன். நாகராஜை கேட்ட போது இன்னும் இருக்கின்றன என்று கூறி, அதோ அங்கே பாருங்கள் என்று காட்டினார். இருந்தாலும், முன்பு இருந்த அளவு எண்ணிக்கை இல்லை. இழந்து வருகிறோமோ என்று ஒரு ஐயம். உண்மை தான், கொஞ்சம் கொஞ்சமாக நமது விலங்கினங்களை இழந்து வருகிறோம் என்பது கவலையை அளிக்கிறது. 

ஏறத்தாழ 6 மணி நேரம், நேரம் போனதே தெரியவில்லை. சற்றே கால்வலி தான். கிட்டத்தட்ட 8 கிமீ நட்ந்து இருக்கிறோம். paradise flycathcher rufous morph பார்த்தது ஒரு வரப்பிரசாதம். திரும்பி வரும் போது மட்ட மத்தியானம். வெய்யில் அதிகம். அதிவிரைவு சாலை. கார் ஓட்டுவது நன்றாக இருந்தது. சற்றே கண் அசந்து விட்டேன். ஆனால், நன்றாக கார் ஓட்டினாய். வழியில், தென்னை மரங்கள் வாடி காய்ந்து காணப்பட்டன. வழியில், ஒரு சின்னக்கடை கூட இல்லை. தாகமாக இருந்தது. சமாளித்துக்கொண்டோம். சரணாலயத்தில் இருந்த உணவகத்தில் உணவும் சடியில்லை, காலை உணவு கிடைக்கும்  நேரமும் சாதகமாக இல்லை. 

மீண்டும், Oct Nov மாதங்களில் போகவேண்டும். 

செல்வா


No comments:

Post a Comment

கூண்டுக்கிளி

கார்த்தியின் கூண்டுக்கிளி, செல்வாவின் ஜோதிடக்கிளியுடன் பேசுகிறது நான்  கொஞ்சம் புண்ணியம் செய்தவன் தான்!  ஆனால் அதோ அங்கே  நண்பா நீ, அந்தோ......