Saturday, July 13, 2024

 தம்பி கார்த்திக், 

இந்த பதிவு மூலம், உனது கிரீன் சர்க்கிள் பற்றிய கருத்துக்களை தெரிந்து கொண்டேன். 

குறிப்பாக இந்த வண்ணச்சிறகுகள் தொடரில் உனது ஒவ்வொரு பதிவையும் நீ எழுதும் போது உண்மையில், நான், நமது இந்த பறவை காணல் முயற்சியில், ஒரு புதிய பரிமாணத்தைப் பார்க்கிறேன். 

அதாவது, நாம் பேசும் போது பகிர்வதை விட எழுதும் போது , பல பரிமாணங்கள் வெளிப்படுகின்றன. நீ எழுதும் கருத்துக்கள், அது தொடர்பான சில பல புதிய சிந்தனைகளைத் தூண்டிவிடுகின்றன. வடிவேலு ங்கைச்சுவை தான் நினைவுக்கு வருகிறது. ஒரு படத்தில் நாட்டாமை சொல்வார். 'என்ன நான் சொல்றது? நான் சரியாத்தான் சொல்றேனா' அப்படின்னு கேட்பார். அந்த வடிவேலு joke , நல்லாவே இருக்கும். joke ஒரு புறம் இருக்க, நம்ம செய்வது சரியா என்பதை மற்றவரின் கண்ணோட்டத்தில் பார்ப்பதில் ஒரு சிறப்பு இருக்கத்தான் செய்கிறது. சிலசமயம், இயல்பாக செய்யும் செயல்கள் நல்லதாகவும் இருக்கலாம், கெட்டதாகவும் இருக்கலாம். உள்ளதை உள்ளபடி சொல்லும் திறமை உன்னிடம் இருக்கிறது. அது எனக்கு ஒரு feedbackகாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. 

Hide  அனுபவத்தைப்பற்றி எழுதியிருந்தாய். அதாவது ஒரு கூடாரத்தினுள் அமர்ந்து பறவைகளுக்குத்தெரியாமல், பறவைகளை கண்காணித்து, அவற்றை படம் பிடிப்பது. இது ஒரு நல்ல முறை தான் என்றாலும், இதைப்பற்றி  கருத்து வேறுபாடு உண்டு. இது நாம் பெங்களூரில், புத்தனஹள்ளி பறவை காப்பகத்தில் பார்த்த ஒன்று தான். அனால், ஒரு சின்ன வித்தியாசம் என்னன்னா, இங்கே பரவைகளுக்கு உணவு வைப்பதில்லை. ஆனா, சத்தாலில், பறவைகளுக்கு, தானியங்கள் வைக்கிறார்கள், மற்றும் தண்ணீர்த்தொட்டியில், தனண்ணீர் நிரப்புகிறார்கள். அதுவும் குறிப்பாக, இந்த இடங்கள் ஆள் நடமாட்டமில்லாத, அடர்ந்த காட்டுப்பகுதிகளில், இந்த கூடாரங்கள் இருக்கும். நம்மிடம், சுமார் 2000 ரூபாய் வாங்கி விட்டார்கள். நல்ல சீசனில், இன்னும் அதிகம் வசூல் செய்வார்கள். என்ன செய்வது, இந்த உணவை நாடி வரும் பறவைகளை நாடித்தானே அவர்கள் வாழ்க்கை இருக்கிறது. எனது நண்பர் ஒருவர், இதில் ஒரு thrill இல்லை என்று கூறினார். 

ஆனால் ஒன்று மட்டும் உண்மை, பறவைகளை மிக அருகில் பார்க்க ஒரு சந்தர்ப்பம். அதோடு, நாம் பறவைகளை துன்புறுத்தவில்லையே! ஆகவே, எனக்கு இது அவ்வளவாகத் தப்பாகப் படவில்லை. என் கருத்து தவறாகக்கூட இருக்கலாம் இருந்தாலும், இதையே நம்பி நாம் பறவை காண செல்லக்கூடாது. ஸ்டூடியோ பகுதியில் நடைப்பயணம் செய்வது ஒரு த்ரில் தான். ஒரு கிமி போனால் கூட அது ஒரு அற்புதமான அனுபவம் தான். ஹைடில் பார்க்கும் பறவைகளை இங்கும் காணலாம். ஸ்டூடியோ என ஏன் இந்த இடத்தை அழைக்கிறார்கள் என நான் சொன்னது நினைவிருக்கும். உன்னையும் என்னையும் போன்ற புகைப்பட ஆர்வலர்கள், இங்கே இருக்கும் ஓடையின் அருகில் மணிக்கணக்கில் அமர்ந்து தங்களது திறமைகளை சோதிக்க ஒரு வாய்ப்பு, இதை விட  நல்லா கிடைக்காது. 

இந்த முறை ஓடையில் தண்ணீர் வரவு அதிகமில்லை. பறவை வழிகாட்டி ஹேமந்த் சொன்னது சரி தான், ஹேமந்த் நல்ல இளைஞர். அவருக்கு சம்பாதிக்க வாய்ப்பு என்றாலும், நம்மை வரவேண்டாம் என்று எச்சரித்தார். நம்மைப்போன்ற பறவை ஆர்வலர்கள், ஏமாற்றம் அடையக்கூட்டதென்ற நல்ல எண்ணம். இதை நாம் business ethics என்றும் சொல்லலாம் இல்லையா?

அது மட்டுமல்ல, ஹேமந்த் ஒரு சகல கலாவல்லுனர். சின்னதா ஒரு உணவகம் நடத்துகிறார். SUV காரும் அவர், வைத்துள்ளார். தங்க இடமும் ஏற்பாடு செய்து தருகிறார். பறவைகளைப்பற்றிய விவரமும், விரல்   நுணியில் வைத்திருந்தார். இவரை இரண்டு வருடங்களாக்த்தெரியும். என்ன ஆச்சரியம் என்றால், ' சார், நீங்க, போன வருஷம் ஜுன் 20 ஆம் தேதி வந்திருந்தீர்கள் என்று கூறினார். அசந்து போய் விட்டேன். என்ன நாமெல்லாம் MBA என்றும் கார்ப்பரேட் உலகில், நாம் நம்மை ஆளுமையில் சிறந்தவர்கள் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  இது ஒரு வகைத்திறமை தான். 

8.30 மணி ஆகி விட்டது. ஹைடில் பறவை வருவது குறந்து விட்டது. அங்கு இருந்து, கிளம்பி ஸ்டூடியோ பகுதிக்கு போனோம். ஒடை அருகில் உட்கார்ந்து நமது அதிர்ஷ்டத்தை பார்க்க நினைத்தோம். பறவை காணல், எப்போதுமே அதிர்ஷடத்தைப்பொறுத்தது. நமக்கு தெரிந்தது தான். மணி 9 ஆச்சு, ஒரு red wattled lapwing, ஒரு magpie robin, ஒரு vedtiter flycatcher... அவ்வளவே தான்.  எனக்கு பசி எடுக்க ஆரம்பிசிருச்சு. உடனே ஹேமந்த், தனது டாபாவுக்கு போன் பண்ணி, சுட சுட ஆலு பராந்தாவும்,தயிரும் வரவைத்து விட்டார். அதற்கு காசு கூட வாங்கிக்கல்ல. கடைப்பையன் அருகில் இருந்து, கவனித்டுக்கொண்டான். அது நல்ல பிக்னிக் போல இருந்துச்சு இல்லையா?  

மேலே நாளைக்கு எழுதுகிறேன்

செல்வா

No comments:

Post a Comment

கூண்டுக்கிளி

கார்த்தியின் கூண்டுக்கிளி, செல்வாவின் ஜோதிடக்கிளியுடன் பேசுகிறது நான்  கொஞ்சம் புண்ணியம் செய்தவன் தான்!  ஆனால் அதோ அங்கே  நண்பா நீ, அந்தோ......