Sunday, March 10, 2024

எண்ணப்பறவை சிறகடித்து..! -2








தம்பி கார்த்தி,

உண்மை தான். பருவ மழைக்கும் , குயிலுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கத்தான் செய்கிறது. நமது இலக்கியங்களில், இதைப்பற்றி பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டு நினைவுக்கு வரவில்லை. 

ஏற்கனவே நாமிருவரும் பல முறை சந்தித்திருந்தாலும், நமது இந்த பறவை நடைப்பயணம், நம்மை அருகெ கொண்டு வந்துள்ளது உன்மை தான். கிரீன் சர்க்கிள் என்ற சுற்றுச்சூழல் தன்னார்வ நிறுவனத்தை 23 ஆண்டிகளுக்கு முன் டெல்லியில் இருந்த போது துவங்கினேன். 2021 இல் பெங்களுரில் வசிக்கத்தொடங்கிய போது, அந்த அமைப்பை மீண்டும் அறக்கட்டளையாக மறு பதிவு செய்து எனது சூழல் பயணத்தை தொடர்ந்தேன். இது போன்ற நடைப்பயணங்களை நடத்துவது எனது வழக்கம்.  எனது பறவை ஆர்வம், 40 ஆண்டுகளுக்கும் அதிகமானது. அதைப்பற்றி பின்னால் கூறுகிறேன். 

ஆனால், ஏற்கனவே புத்தனஹள்ளி ஏரியில், உன்னை பலமுறை சந்தித்திருந்தாலும் மீண்டும் ஹரோஹள்ளி பயணத்தின் போது, உன்னை சந்தித்தது ஒரு பெரும் பாக்கியமாகவே கருதுகிறேன். Jacobin cuckoo or pied crested cuckoo ஒரு அழகான பறவை. பெரும்பாலும் தென்னிந்தியாவில் இருந்தாலும், இதை வட இந்தியாவிலும் வெய்யில் காலத்தில் காணலாம். பெண் பறவையைக்காண எனக்கு இதுவரை வாய்ப்பு கிடைக்க வில்லை. சற்றே மங்கலான மரக்கலரில் இருக்கும். காணக்கிடைத்தால், படம் பிடித்து விடுங்கள். Crest இருப்பதால், இதை தமிழில் கொண்டைக்குயில் எங்கிறார்கள் போலும். சின்ன நீல  மீன்கொத்தி (Now common kingfisher) சாதாரணமாக பார்க்க முடியாது, இருந்தாலும், நம்மைப்போன்ற பறவை ஆர்வலர்கள், அடிக்கடி பார்க்கும் பற்வை தான். இது மீன் பிடிப்பதே ஒரு அழகு தான். இது  நீரைக்கிழித்துக்கொன்டு குறி பார்த்து மீனைப்பிடிப்பதை பார்த்து தான், ஜப்பானியர், புல்லட் ரயிலின் முகப்பை வடிவமைத்தார்கள் என்பர். இதைத்தான் ஆங்கிலத்தில் BIOMIMICRY என்பார்கள். 

ஹரோஹள்ளி ஏரியிலும் இப்பொது தண்ணீர், வற்றிக்கொண்டிருக்கிறது.

தொடர்ந்து பறவை பார்ப்போம்.

செல்வா



No comments:

Post a Comment

கூண்டுக்கிளி

கார்த்தியின் கூண்டுக்கிளி, செல்வாவின் ஜோதிடக்கிளியுடன் பேசுகிறது நான்  கொஞ்சம் புண்ணியம் செய்தவன் தான்!  ஆனால் அதோ அங்கே  நண்பா நீ, அந்தோ......