Sunday, March 17, 2024

திம்மச்சந்திரா : எங்கெங்கு காணினும்

 திம்மச்சந்திரா : எங்கெங்கு காணினும் 


எங்கு செல்வது இந்த வாரம் என எண்ணி கொண்டிருந்த பொழுது, ஒவ்வொரு புதிய இடமாக தேடி செல்லும் முனிஷிடம் கேட்கலாம் என தோன்றியது. நான் அதுவும் குறிப்பிட்டு எலகங்கா பக்கத்தில் என்றேன். உடனே பதில் வந்தது. திம்மச்சந்திரா என்று. 

நான் செல்வா அவர்களிடம் கேட்டதும் உடனே போகலாம் என்றார். அவரின் ஆவலும் புதிய இடங்களை தேடி செல்ல வேண்டும் என நினைக்கும் எண்ணங்களும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நானும் செல்வா அவர்களும் ஆர்வக்கோளாரில் ஆறு மணிக்கு சென்று விட்டோம். நல்ல இருட்டு. ஒரு சுற்று ரோட்டில் சென்று வந்தோம். எந்த திருப்பத்தில் செல்லவேண்டும் என தெரியவில்லை. பெட்வேல்டு பக்கம் என முனிஷ் கூறியது ஞாபகம் வந்தது. ஒரு பெரிய மரம். பக்கத்தில் சிறிய சரிவு. . கார் உள்ளே செல்லுமா என சந்தேகம். எப்படி யோ இறங்கி விட்டோம். அங்கு யாரும் இல்லை. ஒரு சிறிய பாதை. நான் இறங்கி சிறிது தூரம் சென்று பாதை ஏதும் தென்படுகிறதா என்று சென்று பார்த்தேன். ஏரியும் தென்பட்டது. ஒரு வழியாக பார்க் செய்து விட்டு வந்தோம். 
புதிய இடங்களுக்கு செல்கையில் இது ஒரு சவால். உள்ளே சென்ற உடன் பார்த்தது Rosy Starling குழுமங்கள். பின்னர் பர்ப்பில் கெரான்.செந்நாரை அல்லது செந்நீலகொக்கு‌ இதன் தமிழ் பெயர். அதன் நீளமான கழுத்தும் அதன் மெதுவாக சிறகடித்து பறக்கும் விதமும் தனித்துவமே. திம்மசந்திராவில் ஒரு ஆறு போல் தண்ணீர் காணப்பட்டது.மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. மறுபடியும் நமது uncommon kingfisher -மீன் கொத்தி .இந்த முறை இருவரும் அதன் பக்கத்தில் நின்று அதனை படம் பிடிக்கும் வாய்ப்பு கிடைத்தது .என்ன ஒரு அழகு . அதன் பக்கத்தில் நீரில் ஏதோ சலனம் பார்த்துக்கொண்டு இருந்தோம் .தவளையின் நகர்தல் .
அன்று பார்த்தது ஜாக்கோபின் குக்கூ ,வைட் த்ரோட்டு கிங்பிஷர் .தமிழில் வெண்தொண்டை மீன்கொத்தி. இதன் ஒலி எனக்கு மனப்பாடம் ஆகிவிட்டது.இதனை விச்சிலி அல்லது சிச்சிலி எனவும் அழைக்கிறார்கள் . இதனை நெடுநாள் புட்டெனஹள்ளியில் தேடி ஒருநாள் பிரேக் எடுக்கையில் என் எதிரில்வந்து எப்படிவேனாலும் போட்டோ எடுத்துகொள் என அது கொடுத்த எல்லா வாய்ப்புகளிலும் நான் எடுத்த படங்கள் அற்புதாமாகி என்னிடம் உள்ளது.அதனலாவோ என்னவோ இப்ப அதன் மேல் உள்ள ஈர்ப்பு குறைந்து போயிருந்தது .இப்பொழுதெல்லாம் common kingfisher எனப்படும் மீன்கொத்தி அல்லது சிரல் எனப்படும் சின்ன ஊதா மீன்கொத்தியை போட்டோ எடுப்பதிலும் பொரி மீன்கொத்தி அல்லது வெள்ளை மீன்கொத்தி அல்லது கரும்புள்ளி மீன்கொத்தி ஏற்ப்படும் Pied kingfisher தேடுவதிலும் மனம் செல்கிறது . இந்த மூன்று மீன்கொத்தி மட்டுமே  உள்ளதாய்  நினைத்த எனக்கு 116 வகைகள் இருப்பதாகவும் இருபத்து எழு மில்லியன் வருடங்கள் முன்பிருந்து அவைகள் இருப்பதாகவும் தெரிந்துகொண்டது ஆச்சரியமான விஷயமே . 

அடுத்த ஆச்சரியம் !
பொரி உள்ளான்  எனப்படும் பொரி மண்கொத்தி ஆங்கிலத்தில் Wood Sandpiper எனும் ஒரு வலசை பறைவையை உற்றுநோக்கி கவனித்தது. திம்மசந்திராவில் தான். செல்வா அவர்கள் அதன் பல வகைகளையும் அதை எப்படி கண்டுகொள்வதையும் பற்றி கூறியது இந்த இயற்கை உடனான நடையில் ஒரு மயில் கல் .  திம்மசந்திரா ஒரு அமைதியான ஒரு ஏரி .மனிதர்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஒரு பகுதி .எல்லாரும் ஒரு முறையாவது சென்றுவரவேண்டும் .நாங்கள் அந்த நல்ல எண்ணத்தில் எங்கள் குழுவை மற்றுமொரு ஒரு வாரத்தில் அழைத்ததும் அது nature வாக்கில்`இருந்து எப்படி பிக்கினிக்காக மாறியது என்பது செல்வா சாரிடம் கேட்டு தெரிந்து கொள்வோம் .

மீண்டும் தேடுவோம் நம்மை தேடும் ஒரு பறவையை தேடி !

கார்த்தி



No comments:

Post a Comment

கூண்டுக்கிளி

கார்த்தியின் கூண்டுக்கிளி, செல்வாவின் ஜோதிடக்கிளியுடன் பேசுகிறது நான்  கொஞ்சம் புண்ணியம் செய்தவன் தான்!  ஆனால் அதோ அங்கே  நண்பா நீ, அந்தோ......